சீனத் தலைநிலத்தில் புதிதாய் 23 பேருக்கு நோய்த்தொற்று
சீனாவின் தலைநிலத்தில் புதிதாய் 23 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 31 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
சீனாவின் தலைநிலத்தில் புதிதாய் 23 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 31 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
புதிதாக அடையாளங்காணப்பட்ட 8 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று அந்நாட்டின் தேசியச் சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
சீனாவில் 84,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மாண்டோர் எண்ணிக்கை 4,634ஆக உள்ளது.