சீனாவில் நேற்று 13 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சீனா திரும்பியவர்கள் என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்தது.
நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் இருந்த 34 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 11-ஆக இருந்தது.
தற்போதைய நிலவரப்படி சீனாவில் 85,672 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
4,634 பேர் மாண்டனர்..