சீனா: ஹர்பின் நகரில் சமூக அளவில் நோய்த்தொற்று - கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்
சீனா: ஹர்பின் நகரில் சமூக அளவில் நோய்த்தொற்று - கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்
சீனாவின் வட பகுதியில் உள்ள ஹர்பின் நகரில் சமூக அளவில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவம் பதிவானதால், அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நாளை முதல், மாஜோங் (mahjong) விளையாட்டுக் கூடங்கள், திரையரங்குகள், அழகு பராமரிப்பு நிலையங்கள் ஆகியன செயல்பட அனுமதி இல்லை.
காற்றோட்டம் குறைந்த இடங்களில் நோய்ப்பரவல் வேகமாக இருக்கும் என்பதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமய நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தளங்களில் 50 விழுக்காட்டு வருகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
சீனாவில் இலையுதிர்காலத் திருவிழா தொடங்கவிருக்கும் நேரத்தில் ஹர்பின் நகரில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
-Reuters/lk