சீனாவில் இன்று புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை
சீனாவில் இன்று புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை
சீனாவில் இன்று புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து சீனத் தலைநிலத்தில் முதன்முறையாகப் புதிய கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவாகவில்லை.
இருப்பினும் இருவருக்குக் கிருமி தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதாய்ச் சீன தேசியச் சுகாதார ஆணையம் தெரிவித்தது.
சோதனையில் அவர்களுக்குப் பாதிப்பில்லை எனத் தெரியவந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் COVID-19 கிருமித்தொற்றால் யாரும் மரணமடையவில்லை என்று அது குறிப்பிட்டது.