சீனாவின் தென்கிழக்குக் கரையோர வட்டாரத்தில் மீண்டும் COVID-19 நோய்ப்பரவல்
சீனாவின் தென்கிழக்குக் கரையோர வட்டாரத்தில் மீண்டும் COVID-19 நோய்ப்பரவல்
சீனாவின் தென்கிழக்குக் கரையோர வட்டாரமான ஃபுஜியானில் புதிதாகக் கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள பூடியான் நகரில் நிலைமை மோசமாகவும் சிக்கலாகவும் இருப்பதாக தேசிய ஊடக நிறுவனமான CCTV தெரிவித்தது.
அங்கு இதுவரை 76 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 28 பேருக்கு அறிகுறி ஏதும் இல்லை.
முதலில் அடையாளம் காணப்பட்டோர், ஒரு தொடக்கப்பள்ளியுடன் தொடர்புபடுத்தப்பட்டனர்.
அங்குள்ள மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.
3 மில்லியன் பேர் வாழும் அந்த நகரில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன.
பெரிய அளவில் கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.