சீனாவில் 5,000-க்கும் அதிகமானோர், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்
சீனாவில் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகிக் குணமடைந்த 5,000-க்கும் அதிகமானோர், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகிக் குணமடைந்த 5,000-க்கும் அதிகமானோர், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து, நலம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
நாள்தோறும் சுமார் 500 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்புகின்றனர்.
குணமடைந்த 600 பேரிடம் முதற்கட்டச் சோதனை நடத்தப்பட்டது.
இலேசான அறிகுறிகள் கொண்டிருந்தோர்- 90%
மோசமாகப் பாதிக்கப்பட்டோர் - 10%
சிகிச்சைக்காலம் - 10 நாள்கள்
தொடக்கத்தில், 92 விழுக்காட்டினருக்கு கிருமித்தொற்றுக்கு எதிரான சிகிச்சை வழங்கப்பட்டது.
சிலர் சீனப் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடியதாகவும் கூறப்பட்டது.