Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் ஒரு மாதம் காணாத அளவில் குறைந்தது மாண்டோர் எண்ணிக்கை

சீனாவில், இதுவரை இல்லாத வகையில் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவில் ஒரு மாதம் காணாத அளவில் குறைந்தது மாண்டோர் எண்ணிக்கை

(படம்: Reuters/Thomas Peter)

சீனாவில், இதுவரை இல்லாத வகையில் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.

அண்மை நிலவரப்படி கிருமித்தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்தனர்.

அவர்களையும் சேர்த்து சீனத் தலைநிலத்தில் மாண்டோர் எண்ணிக்கை மொத்தம் 2,744.

இருப்பினும், கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை முந்தைய நாளைவிட நேற்று சற்று அதிகரித்துள்ளது.

ஆக அண்மைய நிலவரப்படி மேலும் 433 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 406ஆக பதிவானது.

புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 409 பேரும், மாண்டோரில் 26 பேரும் ஹூஉபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மாண்டோரின் எண்ணிக்கை இம்மாதம் 2ஆம் தேதி உச்சத்தைத் தொட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

ஹுபெய் மாநிலத்தைத் தனிமைப்படுத்தியதும் அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்