சீனா: 1.3 டன் கொக்கேய்ன் பறிமுதல்
பெய்ச்சிங்: சீனக் காவல்துறையினர் 1.3 டன் கொக்கேய்ன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
பெய்ச்சிங்: சீனக் காவல்துறையினர் 1.3 டன் கொக்கேய்ன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். தென்னமெரிக்காவிலிருந்து அந்தப் போதைப்பொருள் வந்திருந்தது.
சம்பவத்தின் தொடர்பில் அதிகாரிகள் ஹாங்காங்கைச் சேர்ந்த 10 சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளனர்.
நாட்டில் கைப்பற்றப்பட்ட ஆகப் பெரிய அளவிலான கொக்கேய்ன் அது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன் சந்தை மதிப்பு 160 மில்லியன் டாலர் என ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.