சீனாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு - 12 பேர் மரணம், சுமார் 140 பேருக்குக் காயம்
சீனாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு - 12 பேர் மரணம், சுமார் 140 பேருக்குக் காயம்
சீனாவில் எரிவாயுக் குழாய் ஒன்று வெடித்ததில் குறைந்தது 12 பேர் மாண்டனர், சுமார் 140 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
வெடிப்புச் சம்பவம் ஹூபெய் மாநிலத்தில் உள்ள ஷியான் நகரில் ஏற்பட்டது.
இன்று காலை ஆறரை மணிக்குக் குடியிருப்பு வட்டாரத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு தற்போது மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.
கட்டட இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை.
சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.
138 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களில் 37 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் என்பதால் நகரில் உள்ள மக்கள் ரத்த தானம் செய்யுமாறு மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டன.
-Agencies