சீனாவில் அதிகரிக்கும் கிருமித்தொற்று; ஐந்தே நாள்களில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை
சீனாவில், COVID-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஹெபெய்(Hebei) மாநிலத்தில் ஐந்தே நாள்களில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
சீனாவில், COVID-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஹெபெய்(Hebei) மாநிலத்தில் ஐந்தே நாள்களில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அந்த மருத்துமனை 1,500 அறைகளைக் கொண்டது.
அது, சீனா கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ள 6 மருத்துவமனைகளில் ஒன்று.
எஞ்சிய 5 மருத்துவமனைகள் அடுத்த வாரத்துக்குள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த 6 மருத்துவமனைகள் மொத்தம் 6,500 அறைகளைக் கொண்டிருக்கும்.
சீனா, கிருமித்தொற்றுச் சம்பவங்களைப் பெருமளவு கட்டுப்படுத்தி வந்தது.
ஆனால் இந்த மாதம், நாங்கோங் (Nangong) நகரிலும், ஹெபெய் மாநிலத்திலும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அண்மையில் நூற்றுக்கணக்கானோர் கிருமித்தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.