சீனச் சுரங்க விபத்து - 21 பேர் பலி
சீனாவின் வட பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 21 பேர் மாண்டனர்.
சீனாவின் வட பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 21 பேர் மாண்டனர்.
சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான Xinhua அந்தத் தகவலை வெளியிட்டது.
Shaanxi வட்டாரச் சுரங்கம் நேற்று பிற்பகல் இடிந்தபோது, மொத்தம் 87 பேர் அதில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் 66 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.