சீனா:பருவநிலைக் கொள்கைகளால் 94,000 மரணங்கள் தவிர்க்கப்படலாம்
பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையின் திட்டங்களுக்குச் சீனா எதிர்வரும் 12 ஆண்டுகளுக்குக் கடப்பாடு கொண்டால் 94,000 மரணங்களைத் தவிர்க்க முடியும் எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பெய்சிங்: பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையின் திட்டங்களுக்குச் சீனா எதிர்வரும் 12 ஆண்டுகளுக்குக் கடப்பாடு கொண்டால் 94,000 மரணங்களைத் தவிர்க்க முடியும் எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதன் மூலம் சுகாதாரச் செலவில் 339 பில்லியன் டாலரை மிச்சப்படுத்த முடியும்.
கரியமில வாயு வெளியேற்றத்தை 2030ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காடு வரை குறைக்க சீனா உறுதி பூண்டுள்ளது.
மசாச்சூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அந்த ஆய்வை மேற்கொண்டது. 94,000 உயிர்களைக் காப்பாற்ற கரியமில வாயு வெளியேற்றத்தைச் சீனா ஆண்டுதோறும் சுமார் 4 விழுக்காடு குறைக்க வேண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.