COVID-19: சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,000-ஐ நெருங்குகிறது
COVID-19: சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,000-ஐ நெருங்குகிறது
சீனாவில் இன்று புதிதாக 4 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அங்கு யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிகுறி ஏதுமின்றியே 4 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. நேற்று அந்த எண்ணிக்கை 5ஆக இருந்தது.
கிருமித்தொற்று காரணமாக சீனாவில் 82,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4,600க்கும் அதிகமானோர் மாண்டனர்.