தியான்ஜின் நகரில் வாழும் 3 மில்லியன் பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளும் சீனா
சீனாவின் தியான்ஜின் (Tianjin) நகரில் வாழும் 3 மில்லியன் மக்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சீனாவின் தியான்ஜின் (Tianjin) நகரில் வாழும் 3 மில்லியன் மக்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சீனாவில் இன்று மேலும் 7 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஐவர் தியான்ஜின்னைச் சேர்ந்தவர்கள்.
அதனைத் தொடர்ந்து, கிருமித்தொற்று இடங்களாக அடையாளம் காணப்பட்ட குடியிருப்பாளர் வட்டாரம், மருத்துவமனை, பாலர்பள்ளி ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
ஷாங்ஹாயில் புதிதாக இருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் சென்றிருந்த ஒரு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்த 4,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றுக்காகச் சோதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,414.