கொரோனா கிருமித்தொற்று எங்கிருந்து தொடங்கியது என்பதை ஆராய சீனாவிற்குக் குழுவை அனுப்பும் உலகச் சுகாதார நிறுவனம்
உலகச் சுகாதார நிறுவனம், கொரோனா கிருமித்தொற்று எங்கிருந்து தொடங்கியது என்பதை ஆராய சீனாவிற்குக் குழுவை அனுப்பவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியஸஸ் தெரிவித்துள்ளார்.
உலகச் சுகாதார நிறுவனம், கொரோனா கிருமித்தொற்று எங்கிருந்து தொடங்கியது என்பதை ஆராய சீனாவிற்குக் குழுவை அனுப்பவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியஸஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் அந்தக் குழு சீனாவிற்குச் செல்லும் என்றார் அவர்.
கிருமித்தொற்றைப் பற்றி முழுமையாக அறிந்தால்தான் அதனை எதிர்த்து இன்னும் சுலபமாகப் போராட முடியும். நோய்த்தொற்று எங்கிருந்து ஆரம்பித்தது என்பதையும் தெரிந்துகொண்டால் அதனை முறியடிக்க உதவியாக இருக்கும்
என்று திரு. டெட்ரோஸ் கூறினார்.
வூஹானில் இருக்கும் ஆய்வுக்கூடத்திலிருந்து கொரோனா கிருமி வந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கா கருதுகிறது. ஆனால் சீனா அமெரிக்காவின் வாதத்தை மறுத்து வருகிறது. அறிவியல் வல்லுநர்கள் கொரோனா கிருமி இயற்கையாக உருவானது என்று கூறுகின்றனர்.