சீனா: மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்காணிக்கும் ஆளில்லா வானூர்திகள்
சீனாவின் ஃபுஜியான் மாநிலத்தில் உள்ள புட்டியன் நகரில் காவல்துறையினருக்கு ஆளில்லா வானூர்திகள் பக்கபலமாகத் திகழ்கின்றன.
சீனாவின் ஃபுஜியான் மாநிலத்தில் உள்ள புட்டியன் நகரில் காவல்துறையினருக்கு ஆளில்லா வானூர்திகள் பக்கபலமாகத் திகழ்கின்றன.
மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்காணிக்க அந்த ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாண்டில் இதுவரை அவை சுமார் 2,200 போக்குவரத்து குற்றங்களைக் கண்டுபிடிக்க ஆளில்லா வானூர்திகள் உதவியுள்ளதாக Thepaper.cn செய்தி இணையத்தளம் தெரிவித்தது.
ஆளில்லா வானூர்திகளைச் செயல்படுத்த காவல்துறை அதிகாரிகள் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளில்லா வானூர்திகளால் அரை மணி நேரம் வரை பறக்க முடியும். அவற்றில் மின் ஒலிபரப்பு முறை பொருத்தப்பட்டுள்ளன.