COVID-19 : நோய்த் தடுப்பு, நோய்க் கட்டுப்பாடு, சிகிச்சைமுறை ஆகியவற்றை விவரிக்கும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது சீனா
COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டம் குறித்த வெள்ளை அறிக்கையை, அந்நாட்டு சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளும், அறிவியல் ஆய்வாளர்களும் வெளியிட்டுள்ளனர்.
COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டம் குறித்த வெள்ளை அறிக்கையை, அந்நாட்டு சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளும், அறிவியல் ஆய்வாளர்களும் வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கை, 4 பாகங்களாக பிரித்து வெளியிடப்பட்டுள்ளது.
நோய்த் தடுப்பு, நோய்க் கட்டுப்பாடு, சிகிச்சைமுறை ஆகியவற்றின் தொடர்பில் சீனாவின் முயற்சிகள் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை-நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் கடப்பாடு பற்றிய விவரங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அனைத்துலகச் சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அனைத்துலகச் சமூகம் வழங்கிய தகவல்களுக்கும், ஆதரவுக்கும் சீனத் தகவல் மன்றத்தின் அலுவலக அமைச்சர் Xu Lin நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா கிருமி பற்றி,வெளிப்படையான விதத்தில் உடனடியாக அனைத்துலகச் சமூகத்திற்கு பெய்ச்சிங் தகவல் அளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.