சீனா: 145 குழந்தைகளுக்குக் காலாவதியான இளம்பிள்ளை வாதத் தடுப்பூசி
கிழக்குச் சீனாவில் சுமார் ஒரு மாத காலத்தில் குறைந்தது 145 குழந்தைகளுக்குக் காலாவதியான இளம்பிள்ளை வாதத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கிழக்குச் சீனாவில் சுமார் ஒரு மாத காலத்தில் குறைந்தது 145 குழந்தைகளுக்குக் காலாவதியான இளம்பிள்ளை வாதத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இம்மாதம் 7ஆம் தேதிவரை அந்தச் செயல் நீடித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் அவை தொடர்ந்தவண்ணம் உள்ளன.
அந்தச் சம்பவத்தின் தொடர்பில் ஜியாங்சு மாநிலத்தில் இதுவரை 3 சுகாதார அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காலாவதியான இளம்பிள்ளை வாதத் தடுப்பூசி, குழந்தைகளுக்குத் தேவையான பலனைத் தராவிட்டாலும், சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.