Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

லாவோஸ்: பள்ளத்தில் பேருந்து விழுந்து 13 சுற்றுலாப் பயணிகள் மரணம்

லாவோஸில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் சீனாவைச் சேர்ந்த 13 சுற்றுப்பயணிகள் மாண்டனர்

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

லாவோஸில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் சீனாவைச் சேர்ந்த 13 சுற்றுப்பயணிகள் மாண்டனர்.

பலர் காயமடைந்தனர் என்றும் 31 பேருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

நேற்று பேருந்து 40 பயணிகளுடன் சுற்றுலாத்தலமான லுவாங் பிரபாங் (Luang Prabang) செல்லும் வழியில் சாலையிலிருந்து சறுக்கி 30 மீட்டர் ஆழத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதுவரை 13 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் 2 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

பேருந்தின் 'பிரேக்'கில் இருந்த கோளாற்றால் விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்