Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குமுறும் எரிமலையின் முன்பாகத் திருமணம் செய்த ஜோடி

பிலிப்பீன்சில், தால் எரிமலையின் குமுறல்களுக்கு இடையே தங்கள் திருமணத்தை இனிதே நடத்தி முடித்தனர் இருவர்.

வாசிப்புநேரம் -
குமுறும் எரிமலையின் முன்பாகத் திருமணம் செய்த ஜோடி

(படம்: Facebook/Randolf Evan Photography)

பிலிப்பீன்சில், தால் எரிமலையின் குமுறல்களுக்கு இடையே தங்கள் திருமணத்தை இனிதே நடத்தி முடித்தனர் இருவர்.

லூஸோன் தீவில் இருக்கும் எரிமலை, திருமணம் நடந்த இடத்துக்குச் சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

எரிமலை எந்நேரத்திலும் வெடிக்கும் அபாயம் காரணமாக அந்த வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் திருமணம் செய்து கொண்டனர் அந்த ஜோடி.

திருமணத்திற்குத் திரண்டவர்களிண் முன்னிலையில் கரம்பிடிப்பதா அல்லது அவர்களுடன் சேர்ந்து அவ்விடத்தை விட்டு வெளியேறுவதா என்று தெரியவில்லை இருவருக்கும்.

எனினும் நிதானமாக இருந்து திருமணத்தை முடிக்கத் தீர்மானித்ததாக அவர்கள் கூறினர்.

எரிமலையிலிருந்து கிளம்பும் புகையின் பின்னணியில் எடுக்கப்பட்ட அவ்விருவரின் திருமணப் படம் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தால் எந்நேரத்திலும் வெடிக்கும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணிலாவிலும் கடைகளும் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்