ஆந்திரப் பிரதேசத்தின் தனிமைப்படுத்தும் இடத்தில் தீ- 7 பேர் மரணம்
இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயவாடா நகரில் உள்ள தனிமைப்படுத்தும் இடம் ஒன்றில் மூண்ட தீயில் 7 பேர் மாண்டனர்.
இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயவாடா நகரில் உள்ள தனிமைப்படுத்தும் இடம் ஒன்றில் மூண்ட தீயில் 7 பேர் மாண்டனர்.
COVID-19 நோய்ப்பரவல் சூழலில், தனிமைப்படுத்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் தீ மூண்டது.
அதில் 7 பேர் மாண்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். ஹோட்டலில் சிக்கிக்கொண்ட பலர் மீட்கப்பட்டு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீச்சம்பவம் குறித்த தகவல் வேதனை அளிப்பதாக, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அவர் சொன்னார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஆந்திரப் பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சென்ற வாரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரின் தனியார் மருத்துவமனையில் மூண்ட தீயில் COVID-19 நோயாளிகள் 8 பேர் உயிரிழந்தனர்.