Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.9 மில்லியனைத் தாண்டியது

இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.9 மில்லியனைத் தாண்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.9 மில்லியனைத் தாண்டியது

(படம்: REUTERS/Niharika Kulkarni)

இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.9 மில்லியனைத் தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 85,362 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

மாண்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நோய்த்தொற்றால் இந்தியாவில் சுமார் 93,000 பேர் மாண்டனர்.

இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது சற்று ஆறுதலான செய்தி என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சுமார் 4.85 மில்லியன் பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,903,932-ஆக உள்ளது.

மருத்துவமனையில் 961,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்