Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விருப்பமான கிரிக்கெட் வீரரைக் காண 280 கிலோமீட்டர் பயணம் செய்த சிறுவன்

தாம் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரரை நேரில் சந்திக்க இந்தியாவில் ஒரு சிறுவன் 280 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறான்.

வாசிப்புநேரம் -
விருப்பமான கிரிக்கெட் வீரரைக் காண 280 கிலோமீட்டர் பயணம் செய்த சிறுவன்

(படம்: Facebook.com/Waris Star)

தாம் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரரை நேரில் சந்திக்க இந்தியாவில் ஒரு சிறுவன் 280 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறான்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வாரிஸ் தில்லன் என்ற அந்த 7 வயதுச் சிறுவன், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோட் சிங் சித்துவைக் காண சண்டிகார் நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டான்.

கிரிக்கெட் வீரரைக் காண தம்மை அழைத்துச் செல்லுமாறு வாரிஸ் தம் தந்தையிடம் பல மாதங்களாக மன்றாடியிருந்தான்.

அவனுடைய கனவும் நனவானது!

மொத்தம் 6 மணி நேரப் பயணம்.

தற்போது அரசியல்வாதியாக உள்ள திரு நவ்ஜோட்டின் சண்டிகார் வீட்டிற்கு வெளியே மற்ற ரசிகர்கள், செய்தியாளர்களின் மத்தியில் தந்தையும் மகனும் காத்திருந்தனர்.

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், 'திரு நவ்ஜோட் வீட்டைவிட்டு எப்போது வெளியே வருவார்' என்ற ஏக்கத்துடன் இருவரும் ஆவலோடு 6 மணி நேரம் காத்திருந்தனர்.

இறுதியில் திரு நவ்ஜோட், வெளியே வந்து வாரிஸைச் சந்தித்ததோடு, அவரைக் கட்டியணைத்துக்கொண்டார். பின்னர், வாரிஸ் கொண்டு வந்த இரு கிரிக்கெட் மட்டைகளில் கையெழுத்திட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்