சிலாங்கூர் சாலைச் சண்டை- கொலை வழக்காக மாறியது
சிலாங்கூரில் இரண்டு வாகனமோட்டிகள் அடித்துக்கொள்ளும் சண்டையைக் கொலை வழக்காக மாற்றியுள்ளனர் மலேசியக் காவல்துறை அதிகாரிகள்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சிலாங்கூரில் இரண்டு வாகனமோட்டிகள் அடித்துக்கொள்ளும் சண்டையைக் கொலை வழக்காக மாற்றியுள்ளனர் மலேசியக் காவல்துறை அதிகாரிகள்.
கடந்த சனிக்கிழமை சுங்கை பெசி சுங்கச் சாவடி அருகே இரண்டு வாகனமோட்டிகளுக்கு இடையே சண்டை மூண்டது.
அதில் ஓர் ஆடவர் பேஸ்பால் மட்டையை எடுத்து மற்றொருவரின் காரில் அடித்துள்ளார்.
காரில் இருந்த ஆடவர் தப்பிச்செல்ல எண்ணி பேஸ்பால் மட்டையால் தாக்கியவர்மீது காரைச் செலுத்தினார். அதில் அந்த ஆடவர் மாண்டார்.
மாண்ட 29 வயது மலாய் ஆடவர் சிகிச்சை பலனின்றி மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரில் இருந்த ஆடவர் 40 வயது சீன ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சம்பவம் தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.