சீனா: லெக்கிமா சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 44க்கு உயர்வு
கிழக்குச் சீனாவில் லெக்கிமா (Lekima) சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 44க்கு உயர்ந்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
கிழக்குச் சீனாவில் லெக்கிமா (Lekima) சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 44க்கு உயர்ந்துள்ளது.
கரையோரப் பகுதிகளைப் பதம்பார்த்துவரும் சூறாவளியால் சுமார் 2 பில்லியன் டாலர் பொருளியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 16 பேரைக் காணவில்லை.
இதற்கு முன்னர் சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 32 என்று அந்நாட்டின் CCTV செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.