இந்தியாவின் புது டில்லி சட்டமன்றத் தேர்தல் - மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி
இந்தியாவின் புதுடில்லி சட்டமன்றத் தேர்தலில் 'ஆம் ஆத்மி' (Aam Aadmi) கட்சி மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் புதுடில்லி சட்டமன்றத் தேர்தலில் 'ஆம் ஆத்மி' (Aam Aadmi) கட்சி மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது.
புது டில்லி சட்டமன்றத்துக்கான மொத்த இடங்கள் 70.
ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்றுள்ளது.
அது அன்னை இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி.
என்று புது டில்லி முதலமைச்சர் Arvind Kejriwal கூறினார்.
பாரதிய ஜனதாக் கட்சி எட்டு இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
சென்ற ஆண்டு, இந்தியா நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சிக்கு அது பின்னடைவாகக் கருதப்படுகிறது.