புதுடில்லி ஹோட்டலில் தீ - குறைந்தது 17 பேர் மரணம்
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஒரு ஹோட்டலில் இன்று மூண்ட தீயில் குறைந்தது 17 பேர் மாண்டனர்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஒரு ஹோட்டலில் இன்று மூண்ட தீயில் குறைந்தது 17 பேர் மாண்டனர்.
மேலும் மூவர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாண்டோரில் ஒரு மாதும் ஒரு குழந்தையும் அடங்குவர் என்று டில்லி தீயணைப்புச் சேவை இயக்குநர் ஜி.சி. மிஸ்ரா குறிப்பிட்டார்.
நகரின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் Arpit Palace ஹோட்டலில் அதிகாலையில் தீ மூண்டது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.