Diamond Princess சொகுசுக் கப்பலில் மேலும் 44 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று
Diamond Princess சொகுசுக் கப்பலில் மேலும் 44 பேருக்கு COVID-19 எனும் கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Diamond Princess சொகுசுக் கப்பலில் மேலும் 44 பேருக்கு COVID-19 எனும் கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கப்பலில் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 218க்கு அதிகரித்துள்ளது.
வரும் நாள்களில் மேலும் பல பயணிகளுக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பரிசோதனைக் கருவிகளுக்குத் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தனியார் நிலையங்களில் சுகாதாரப் பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கி, அன்றாடம் 1,000 பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஜப்பானின் யோக்கோஹாமா பகுதியில் சொகுசுக் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 7 நாளுக்கு அது அங்கு இருக்கும்.