Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடல்நாகப் படகுப் பந்தய விபத்து - 17 பேர் மரணம்

கடல்நாகப் படகுப் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு படகுகள் ஆற்றில் கவிழ்ந்ததில் 17 பேர் மூழ்கி மரணமடைந்தனர்.

வாசிப்புநேரம் -
கடல்நாகப் படகுப் பந்தய விபத்து - 17 பேர் மரணம்

(படம்: Chinatopix via AP)

கடல்நாகப் படகுப் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு படகுகள் ஆற்றில் கவிழ்ந்ததில் 17 பேர் மூழ்கி மரணமடைந்தனர்.

சீனாவின் குய்லின் நகரத்திற்கு அருகே அந்தத் துயரச் சம்பவம் நடந்தது.

இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீரோட்டம் பலமாக இருந்ததால் படகுகள் கவிழ்ந்தன.

முதலில் ஒரு படகு கவிழ்ந்ததைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட படங்கள் காட்டின.

சம்பவ இடத்திற்குச் சென்ற மற்றொரு படகும் பின்னர் கவிழ்ந்ததால் அதிலிருந்தவர்கள் ஆற்றில் விழுந்து மூழ்கியதைப் படங்கள் காட்டின.

மொத்தம் 200 மீட்புப் பணியாளர்கள் இரவு நீண்டநேரம் வரை ஆற்றில் விழுந்தவர்களை மீட்க முயன்றனர்.

படகில் இருந்தவர்கள் உயிர்க்காப்பு ஆடைகளை அணிந்திருக்கவில்லை என்று சீன ஊடகங்கள் தெரிவித்தன.

விபத்துடன் தொடர்புடைய இருவர் தடுப்புக்காவலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்