மலேசியா: BMW கார் தீப்பிடித்ததில் ஓட்டுநர் மரணம்
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் BMW கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் மாண்டார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் BMW கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் மாண்டார்.
காரை ஓட்டிக் கொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சறுக்கி மரத்தில் மோதிய கார் தீப்பிடித்தது என்று பெட்டலிங் ஜெயா மாவட்டத் தலைமைக் காவல் அதிகாரி தெரிவித்தார்.
சுபாங் விமான நிலையத்தின் அருகே உள்ள ஜாலான் PJU 1A/1 சாலையில் அந்தச் சம்பவம் ஏற்பட்டது.
கார் முழுமையாக தீக்கிரையானதால் ஓட்டுநரை அடையாளங்காண முடியவில்லை. காரின் பதிவு எண் பலகையும் முற்றாகச் சேதம் அடைந்தது.
ஒட்டுநரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக Universiti Malaya மருத்துவ நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.