Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: போதைப்பொருளைக் கடத்த முயன்ற மூவருக்கு மரண தண்டனை

மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில், மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா: போதைப்பொருளைக் கடத்த முயன்ற மூவருக்கு மரண தண்டனை

(படம்: TODAY )


மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில், மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் ஈரானியர்கள்.

ஒருவர் மலேசியர்.

அதே வழக்கில் தொடர்புடைய இன்னொரு பெண்ணை பினாங்கு உயர் நீதிமன்றம் விடுவித்தது.

அந்தப் பெண்ணுக்குப் போதைப் பொருள் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

63 வயது மலேசியர் J. பாலகிருஷ்ணன், ஈரானியர்களான 37 வயது முகமது அபாஸி யூனெஸ், 31 வயது நம்ஸிகி வாஜ் செயெத் ரெஸா - மூவருக்கும் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு அந்த மூவரும் சுமார் 48 கிலோகிராம் போதைப் பொருளைக் கடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. .

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், அவர்களின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்