இந்தோனேசியாவிலும் கிழக்குத் திமோரிலும் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - 70க்கும் மேற்பட்டோர் மரணம்
இந்தோனேசியாவிலும் கிழக்குத் திமோரிலும் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 70க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவிலும் கிழக்குத் திமோரிலும் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 70க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் நேர்ந்த நிலச்சரிவுகளாலும் திடீர் வெள்ளத்தாலும் பலரைக் காணவில்லை என்று அவர்கள் கூறினர்.
பேரிடர் நிர்வாக அமைப்பின் பேச்சாளர்,
இந்தோனேசியாவில் 55 பேர் மாண்டதாகவும் 42 பேரைக் காணவில்லை என்றும், ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கிழக்குத் திமோரில், குறைந்தது 16 பேர் மாண்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
-AFP/zl