Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கம்பிவடத்தைத் திருடும் முயற்சியில் உடலில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த ஆடவர்

மலேசியா: போர்ட் டிக்சன் துணை மின்நிலையத்திலிருந்து இரும்புக் கம்பிவடத்தைத் திருட முயன்ற ஆடவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் பலத்த காயமடைந்துள்ளார். 

வாசிப்புநேரம் -
கம்பிவடத்தைத் திருடும் முயற்சியில் உடலில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த ஆடவர்

(படம்: Pixabay)

மலேசியா: போர்ட் டிக்சன் துணை மின்நிலையத்திலிருந்து இரும்புக்
கம்பிவடத்தைத் திருட முயன்ற ஆடவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

அந்த 27 வயது நபர் தனித்துச் செயல்பட்டதாகக் காவல்துறை கூறியது.

சம்பவம் நண்பகல் 12 மணியளவில் நடந்தது.

கம்பிவடம் பிடுங்கப்பட்டபோது பலத்த சத்தம் கேட்டது என்றும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

சம்பவத்தை நேரில் கண்டவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தீக்காயங்களுடன் ஆடவர் மோட்டார்சைக்கிளில் ஏறி விரைந்ததாகக் கூறப்பட்டது.

மோசமான நிலையிலிருக்கும் அந்நபர் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவருகிறார்.

விசாரணை தொடர்கிறது.

உடல்நிலை சீரானதும் அவர் கைதுசெய்யப்படுவார் என்று காவல்துறை தெரிவித்தது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்