Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இமயமலை ஏற முயன்ற இரு இந்தியர்கள் மரணம்

இமயமலை ஏறும் முயற்சியில் இரு இந்தியர்கள் மாண்டனர், ஓர் அயர்லந்து நாட்டவரைக் காணவில்லை.

வாசிப்புநேரம் -
இமயமலை ஏற முயன்ற இரு இந்தியர்கள் மரணம்

(படம்: Reuters)

இமயமலை ஏறும் முயற்சியில் இரு இந்தியர்கள் மாண்டனர், ஓர் அயர்லந்து நாட்டவரைக் காணவில்லை.

இவ்வாரம் இமயமலை ஏற முயன்று மாண்ட அல்லது காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாகியுள்ளது.

புதுடில்லியைச் சேர்ந்த 27 வயது ஆடவர் தம் கூடாரத்தில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார். அவரின் மரணத்திற்குக் காரணம் கண்டறியப்படவில்லை.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 34 வயது ஆடவர் இமயமலைப் பிரதேசத்தின் ஐந்தாவது ஆக உயரமான மலையில் மாண்டார்.

அயர்லந்து நாட்டவர் இமயமலையின் உச்சியிலிருந்து சறுக்கிக் காணாமற்போனார்

போதுமான அனுபவமின்மையும் பயிற்சியின்மையும் விபத்துகள் அதிகரிக்கக் காரணங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இவ்வாண்டு இமயமலை ஏற இதுவரை இல்லாத அளவில் 378 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்