ஃபானி சூறாவளி: சுமார் 6500 பள்ளிகள் சேதமடைந்தன
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் வீசிய ஃபானி (Fani) சூறாவளியில் சுமார் 6500 பள்ளிகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் வீசிய ஃபானி (Fani) சூறாவளியில் சுமார் 6500 பள்ளிகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 417 கோடி ரூபாய் (சுமார் $81 மில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பூரி மாவட்டத்தில் மட்டும் 2,134 பள்ளிகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டாக் பகுதியில் சுமார் 1,000 பள்ளிகள் சேதமடைந்தன.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் குடிநீர்க் குழாய்கள் சரிசெய்யப்பட்டிருப்பதாக ஒரிசா அரசாங்கம் தெரிவித்தது.