இந்தியா: அரசாங்கத்திற்கு எதிரான வெற்றியைக் கொண்டாடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள்
இந்தியாவின் டில்லி நகரில் அரசாங்கத்திற்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று ஆர்ப்பரித்தனர்.
இந்தியாவின் டில்லி நகரில் அரசாங்கத்திற்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று ஆர்ப்பரித்தனர்.
கடந்த வாரம் இந்திய அரசாங்கம், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மீட்டுக்கொள்வதாகக் கூறியதை அவர்கள் கொண்டாடினர்.
இருப்பினும் சட்டங்கள் அதிகாரபூர்வமாக மீட்டுக்கொள்ளப்படும்வரை, விவசாயிகள் காத்திருக்கவிருப்பதாகக் கூறினர்.
மேலும் அவர்களது ஏனைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தொடர்ந்து ஆர்ப்பரிக்கவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த வாரம், இந்திய நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை அகற்ற அரசாங்கம் புதிய சட்டத்தைத் தாக்கல் செய்யும்.
இருப்பினும், குறைந்தபட்ச விலை உத்தரவாதம் அளிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்பதற்கு அரசாங்கம் எந்த உறுதியும் அளிக்கவில்லை.