பங்களாதேஷ் தீச்சம்பவத்தில் 69 பேர் பலி
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் குறைந்தது 69 பேர் மாண்டனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குறைந்தது 69 பேர் மாண்டனர்.
அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
ரசாயனக் கிடங்குகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட குடியிருப்புக் கட்டடங்களில் தீ மூண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடல், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், மேலும் சில சடலங்கள் மீட்கப்படலாம் என பங்களாதேஷ் தீயணைப்புத் துறை கூறுகிறது.
எரிவாயுக் கலனால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதிலிருந்து, எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய இரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த மற்றொரு கட்டடத்துக்குத் தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மற்ற 4 கட்டடங்களுக்குத் தீ விரைவாகப் பரவியது.
தீ ஏற்பட்ட நேரத்தில், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் தப்பிச் செல்ல முடியவில்லை என்று தீயணைப்புத் துறை கூறியது.