காஷ்மீரில் இந்திய இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை - படையினர் நால்வர் பலி
இந்தியாவின் காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இந்தியாவின் காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர்.
நான்கு நாள்களுக்கு முன், அதே பகுதியில் உள்ள புல்வாமாவில் (Pulwama) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் 41 உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீநகருக்குத் தெற்கே இன்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில் ஒரு வீரரரும் பொதுமக்களில் ஒருவரும் மோசமாகக் காயமுற்றனர்.