இந்தியாவில் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிரெஞ்சு நாட்டவர்
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
68 வயது பிரெஞ்சு நாட்டவரின் துண்டிக்கப்பட்ட உடற்பாகங்கள் 3 பைகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
29 வயது மாணவர் ஒருவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக இந்தியக் காவல்துறை அதிகாரி செந்தில் குமார் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அந்த மாணவனும் மாண்ட பிரெஞ்சு நாட்டவரும் உடலுறவு கொண்டதாகவும் அதன்பின் மூண்ட சண்டையில், மாணவன் அவரைக் கொலை செய்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சம்பவம் குறித்து பிரெஞ்சுத் தூதரகத்தில் தகவல் தெரிவித்துள்ளதாகவும் திரு. செந்தில் குமார் கூறினார்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இந்தியாவில் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் அது விவாதிக்கப்பட்டு வருகிறது.