மரணத்திலும் இணைந்த தாய், மகன்
தாயாரின் இறுதிச் சடங்கின்போது சவப்பெட்டியைத் தூக்கிச் சென்ற மகனின் மீது அது கைநழுவி விழுந்ததில் பெட்டி அவரை நொறுக்கியது.
தாயாரின் இறுதிச் சடங்கின்போது சவப்பெட்டியைத் தூக்கிச் சென்ற மகனின் மீது அது கைநழுவி விழுந்ததில் பெட்டி அவரை நொறுக்கியது.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 40 வயது மகனும் தாய்க்குப் பிறகு இறந்துபோனார்.
சவப்பெட்டியை ஒரு கோபுரத்தின் மேலே உயர்த்திவைப்பது அந்தக் குடும்பத்தின் வழக்கம். மூங்கிலால் ஆன ஏணியில் ஏறி மகன் சவப்பெட்டியைக் கோபுரத்தின்மீது வைக்கவேண்டும்.
ஆனால், ஏணி திடீரென்று நகர்ந்து எடைதாங்க முடியாமல் கீழே விழுந்தது. அப்போது சவப்பெட்டி மகன் மீது விழுந்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகனின் உயிர் அங்கு பிரிந்தது.
மகனின் இறுதி சடங்குக்குப்பின், தாய்க்கு அருகே அடக்கம்செய்யப்பட்டார்.