Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த சமய போதகருக்குச் சாகும்வரை சிறை

இந்தியாவைச் சேர்ந்த சமய போதகர் ஆசாராம் பாபு என்பவர் 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த சமய போதகருக்குச் சாகும்வரை சிறை

(படம்: AFP)

இந்தியாவைச் சேர்ந்த சமய போதகர் ஆசாராம் பாபு என்பவர் 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூரிலுள்ள பழங்குடி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு, சாகும்வரை சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அந்தச் சிறுமியைத் தாக்கியிருந்ததாகக் கூறப்படும் தீய சக்திகளை விரட்ட 77 வயது ஆசாராம் பாபு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

"பாபுஜி" என அழைக்கப்படும் ஆசாராம் பாபுவின் போதனைகளைப் பல மில்லியன் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நூற்றுக்கணக்கான ஆசிரமங்களை அவர் வழிநடத்தி வருகிறார்.

இறைபக்தியுடன் பாலியல் ஆசைகளைத் துறந்த வாழ்க்கையை வாழ அவர் ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது.

தம் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துவருகிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆசாராம் பாபுவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால், கலவரம் வெடிக்கலாம் என்று முன்னுரைக்கப்பட்டு, இந்திய மாநிலங்கள் சிலவற்றில் ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்