வியட்நாம் தலைநகர் ஹனோயில் மேலும் தளர்த்தப்படும் COVID-19 கட்டுப்பாடுகள்
வியட்நாம் தலைநகர் ஹனோயில் கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவுள்ளன.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவுள்ளன.
அங்கு புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவ்வேளையில், அந்நகரில் சுமார் 94 விழுக்காட்டினருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வியட்நாமிய அரசாங்கம் தெரிவித்தது.
இதற்கிடையே ஹனோயில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் தொடரலாம் என்று அதிகாரிகள் அறிவித்தனர். அங்கு நாளுக்கு சராசரியாக 20 பேருக்கு மட்டுமே புதிதாகக் கிருமித்தொற்று ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சமூகத்தில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளைக் காலவரையின்றிச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.