ஹாங்காங்: ஆர்ப்பாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஜனநாயக ஆர்வலர்கள் மூவர் தடுப்புக்காவலில்
ஹாங்காங்கில் சென்ற ஆண்டு நடந்த ஜூன் மாத ஆர்ப்பாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஜனநாயக ஆர்வலர்கள் மூவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்கில் சென்ற ஆண்டு நடந்த ஜூன் மாத ஆர்ப்பாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஜனநாயக ஆர்வலர்கள் மூவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறைத் தலைமையகத்தை அப்போது முற்றுகையிட்டனர்.
ஜோஷுவா வோங் (Joshua Wong), அக்னஸ் சாவ் (Agnes Chow), ஐவன் லாம் (Ivan Lam) மூவரும் அனுமதியற்ற கூட்டங்களில் கலந்துகொள்ள ஆர்வலர்களை ஊக்குவித்ததை ஒப்புக்கொண்டனர்.
அடுத்த மாதம் 2ஆம் தேதி அதன் தொடர்பில் தீர்ப்பளிக்கப்படக்கூடும்.
மூவருக்கும் அதிகபட்சமாக ஆளுக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.