ஹாங்காங்: குழாய் வெடிகுண்டு கண்டுபிடிப்பு - நால்வர் கைது
ஹாங்காங் காவல்துறையினர் சக்திவாய்ந்த குழாய் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்துள்ளனர்.
ஹாங்காங் காவல்துறையினர் சக்திவாய்ந்த குழாய் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்துள்ளனர்.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குறைந்தது 4 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவருக்கு அரசாங்க எதிர்ப்புக் குழுவுடன் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அவர்கள் மொங்கோக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெளியேறும் போது பிடிபட்டனர்.
அந்த வீட்டில் குழாய் வெடிகுண்டும் ஆர்ப்பாட்டத்திற்குத் தேவையான பொருள்களும் காணப்பட்டன.
வெடிகுண்டைச் செயலிழக்கச்செய்யும் பிரிவினர் அழைக்கப்பட்டபோது
அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த வெடிகுண்டில் 40 கிராம் வெடிபொருள் இருந்தது. காவல்துறையினர் அதைச் செயலிழிக்கச்செய்தபோது சிறிய வெடிப்பும் கேட்டது. அதனால் மின்தூக்கி ஒன்றில் சிறிய ஓட்டை விழுந்தது.