Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் மீது மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்

ஹாங்காங்கில் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் மீது மேலும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர அரசாங்க வழக்குரைஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -


ஹாங்காங்கில் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் மீது மேலும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர அரசாங்க வழக்குரைஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த விபத்தில் 19 பேர் மாண்டனர். 60க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்று (பிப்ரவரி 13) ஃபான்லிங்கில் (Fanling) உள்ள மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஓட்டுநர் சான் ஹோ-மிங் (Chan Ho-ming) நிறுத்தப்பட்டார்.

அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணத்தை விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், பேருந்துச் சிதைவுகள், பேருந்தின் தகவல் பதிவுப் பெட்டி ஆகியவற்றின் ஆய்வுக்காக வழக்குரைஞர்கள் காத்திருப்பதாய் ஹாங்காங் ஊடகங்கள் கூறுகின்றன.

சட்ட ஆலோசனையைப் பொறுத்து ஓட்டுநர் மீது இன்னும் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்