ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள்: அரசியல்வாதியின் காதைக் கடித்தவர் மீது குற்றச்சாட்டு
ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரைக் கத்தியால் குத்தியதோடு, அரசியல்வாதி ஒருவரின் காதைக் கடித்த ஜோ சன் (Joe Chen) என்ற ஆடவர்மீது, நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரைக் கத்தியால் குத்தியதோடு, அரசியல்வாதி ஒருவரின் காதைக் கடித்த ஜோ சன் (Joe Chen) என்ற ஆடவர்மீது, நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஜோவை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டிரு சியு (Andrew Chiu)தடுக்க முற்பட்டார்.
அப்போது திரு. ஆண்டிருவின் காதை, ஜோ கடித்தார்.
மேலும், ஜோஷுவா வோங், எக்னஸ் சாவ் (Joshua Wong, Agnes Chow) ஆகிய சமூக ஆர்வலர்களும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளனர்.
காவல்துறைத் தலைமையகத்திற்கு வெளியே கடந்த ஜூன் மாதம், சட்ட விரோதமாக ஆட்களைத் திரட்டிய குற்றச்சாட்டை அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.