ஹாங்காங் : தற்கொலை எண்ணம் கொண்டோர் எண்ணிக்கை 10 ஆண்டு இல்லாத உயர்வு
ஹாங்காங்கில் மனச்சோர்வால் பாதிக்கப்படுவோர், தற்கொலை எண்ணம் கொண்டோர் எண்ணிக்கை பத்தாண்டு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
ஹாங்காங்கில் மனச்சோர்வால் பாதிக்கப்படுவோர், தற்கொலை எண்ணம் கொண்டோர் எண்ணிக்கை பத்தாண்டு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் அதற்குக் காரணம் என்று ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
1,200 பேரிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் அது தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.
மோசமான சமூக நிகழ்வுகளால் ஏற்படும் 'மனநலக் கொள்ளைநோய்' என்று ஆய்வாளர்கள் அதை வகைப்படுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களைக் காரணமாகக் குறிப்பிட்டு, இதுவரை நால்வர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.