ஹாங்காங் : 2 மாதங்களுக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்பிய ரயில் சேவைகள்
ஹாங்காங்கில் அனைத்து ரயில் தடங்களிலும் இன்று சேவை வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.
ஹாங்காங்கில் அனைத்து ரயில் தடங்களிலும் இன்று சேவை வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.
இலகு ரயில்சேவைகள், MTR பேருந்துச் சேவைகளும் வழக்கமான சேவை நேரத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன.
கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு அந்தப் போக்குவரத்துச் சேவைகள் சீராகியுள்ளன.
ஆர்ப்பாட்டங்களின்போது பல ரயில் நிலையங்கள் கடுமையாகச் சேதமுற்றன. அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாய் MTR நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும் அண்மை வாரங்களில் அதிகம் சேதமுற்ற University நிலையம் இன்னும் மூடியிருக்கிறது. அதில் பழுதுபார்ப்புப் பணிகள் இடம்பெறவில்லை.