ஹாங்காங்: தேவையேற்பட்டால் ஆர்ப்பாட்டக்காரர்களை வன்மையாகவும் கையாளுவோம் - காவல்துறைத் தலைவர்
ஹாங்காங் அதிகாரிகள் மென்மையாகவும், தேவையேற்பட்டால் வன்மையாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கையாள்வர் என்று அந்நகரின் காவல்துறைத் தலைவர் கிரிஸ் டாங் (Chris Tang) கூறியுள்ளார்.
ஹாங்காங் அதிகாரிகள் மென்மையாகவும், தேவையேற்பட்டால் வன்மையாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கையாள்வர் என்று அந்நகரின் காவல்துறைத் தலைவர் கிரிஸ் டாங் (Chris Tang) கூறியுள்ளார்.
இன்று பின்னேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி அமைதியாக நடக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
மனித உரிமை முன்னணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இன்றைய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர், அந்த அமைப்பு நடத்திய பேரணிகளில் மில்லியன் கணக்கானோர் கலந்து கொண்டனர்.