ஹாங்காங் : இன்று அமைதியான முறையில் பேரணிகள் நடத்த ஏற்பாடு
ஹாங்காங்கில் இன்று அமைதியான முறையில் பேரணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இன்று அமைதியான முறையில் பேரணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க எதிர்ப்பு ஏற்பாட்டாளர்களின் 3 பேரணிகளுக்குக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று அதேபோன்று அனுமதியுடன் நடத்தப்பட்ட பேரணிகள் அமைதியான முறையில் முடிவுற்றன.
இருப்பினும் பிரின்ஸ் எட்வர்ட் (Prince Edward) வட்டாரத்தில் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தைச் சீர்குலைக்க சாலைகளில் தடுப்புகளை நிறுவியதையடுத்து பதற்றம் அதிகரித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகிலிருந்த காவல்நிலைய அதிகாரிகளிடம் சினமூட்டும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
மோதல்கள் குறித்த தகவல் ஏதுமில்லை.